உடுமலை : மடத்துக்குளம் அருகே கணியூர் ஜோதிநகரில் ஸ்ரீ ஐயப்பன் கோவில் உள்ளது. இக் கோவிலில், செப்., 1ம் தேதி உத்திர நட்சத்திர பூஜை மற்றும் அன்னதானம் நடக்கிறது.அன்று காலை, 9:00 மணிக்கு கணபதி ஹோமமும், காலை, 11:00 மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், பகல், 12:30 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் காட்சியும், பகல் 1:00 மணிக்கு அன்னதானமும் நடைபெறும்.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் செய்து வருகின்றனர்.