பதிவு செய்த நாள்
28
ஆக
2019
01:08
விழுப்புரம்: விழுப்புரம் கே.கே., ரோட்டில் வேம்பு அரசமரத்தடியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவையொட்டி, நேற்று முன்தினம் 26ம் தேதி காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாக சாலைபூஜை, தத்துவார்ச்சனை நாடி சந்தானம், மகா பூர்ணாஹூதி, 9:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வரும் 2ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடக்கிறது. ஏற்பாடுகளை, சந்திரசேகர சிவாச்சாரியார், நடராஜ குருக்கள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.
* கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ராஜா நகர் பெரிய ஏரிக்கரையில் உள்ள விநாயகர், பாலமுருகன், சூரியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா கணபதி, லட்சுமி ஹோமத்துடன் துவங்கியது.
தொடர்ந்து நேற்று முன்தினம் 26ம் தேதி காலை 7:00 மணிக்கு வேதிகா அர்ச்சனை, திரவிய ஹோமம், பூர்ணாகுதி, யாத்ரா தானம், மகா தீபாராதனை காண்பித்தனர். 8:30 மணிக்கு சூரியப் பன் விமானத்திலும், 9:30 மணிக்கு விநாயகர், பாலமுருகன், சூரியப்பன் மூலஸ்தானத் திலும் புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது.செஞ்சிநெகனுார் பட்டி செல்வ விநாய கர் கோவிலில் கடந்த 24ம் தேதி காலை 10:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கடங்கள் யாக சாலை எழுந்தருளுதல், இரவு 7 மணிக்கு யாகசாலை பூஜை, நடந்தது. 9:00 மணிக்கு அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் நடந்தது. நேற்று முன்தினம் 26ம் தேதி காலை சிறப்பு வேள்வி பூஜையும் யாத்ரா தானம், கடம் புறப்பாடாகி, 9:30 மணிக்கு விமான மகா கும்பாபிஷகமும் நடந்தது.