இடுகம்பாளையத்தில் அனுமந்தராயசுவாமி கோவில் கும்பாபிஷேக ஆலோசனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஆக 2019 01:08
மேட்டுப்பாளையம்:சிறுமுகையை அடுத்த இடுகம்பாளையத்தில் அனுமந்தராயசுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா செப்., 3ம் தேதி துவங்கி, 5ம் தேதி கும்பாபி ஷேகம் நடக்கிறது.
இந்த விழா குறித்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் கோவை ஆர்.டி.ஒ., சுரேஷ் தலைமையில் நடந்தது.
பக்தர்களுக்கான பாதுகாப்பு, பஸ் வசதி, விழா நடைபெறும், 4, 5 ஆகிய இரு நாட்கள் தடையி ல்லா மின்சாரம் வழங்க வேண்டும். ஆம்புலன்ஸ்களும், தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதில் அனைத்து துறை அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர்.