திருப்புத்தூர் : பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் சதுர்த்திப் விழாவை முன்னிட்டு கஜ முக சூரசம்ஹாரம் நடந்தது.
ஆக.24 காலையில் கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில், தினசரி காலை மற்றும் இரவில் சுவாமி வீதி உலா நடக்கிறது. 6ம் திருநாளை முன்னிட்டு கஜமுகா சூரசம்ஹாரம் நடந்தது. மாலை 5:25 மணிக்கு விநாயகர் வெள்ளி யானை வாகனத்தில் கோயிலிலிருந்து புறப்பாடு துவங்கியது. அப்போது பலத்த மழை பெய்யத் துவங்கியது. இதனால் இரவு 7.00 மணிக்கு சண்டிகேஸ்வரருடன் விநாயகர் யானை வாகனத்தில் தந்தத்துடன் புறப்பட்டார்.
கோயிலை வலம் வரும் போது எதிரே கஜமுகாசூரன் ஆர்ப்பரிப்புடன் விநாயகரை வலம் வர விநாயகர் தன் தந்தத்தால் சூரனை வதைத்தார். திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.செப்.1ல் தேரோட்டமும், மூலவர் சந்தனக் காப்பு அலங்காரமும், செப்.2ல் காலை கோயில் திருக்குளத் தில் தீர்த்தவாரியும், பகல் முக்கூரணி மோதகமும், இரவு பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலாவும் நடைபெறும்.