குமாரபாளையத்தில் வில்வ இலை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காளியம்மன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஆக 2019 03:08
குமாரபாளையம்: ஆவணி அமாவாசை மற்றும் வெள்ளியையொட்டி, குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. ஆவணி அமாவாசை மற்றும் வெள்ளியையொட்டி குமாரபாளையம் கோட்டைமேடு காளியம்மன், சவுண்டம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவி ல்கள், சமயபுரம் மாரியம்மன் கோவில், பண்ணாரி மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், அம்மன் நகர் ஐயப்பன் கோவிலில் உள்ள மஞ்சமாதா கோவில் உள்ளிட்ட கோவில் களில் சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தன.
ராஜா வீதி காளியம்மன் கோவிலில், அம்மனுக்கு வில்வ இலைகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற, கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு கூழ் ஊற்றினர்.