பதிவு செய்த நாள்
31
ஆக
2019
03:08
நாமக்கல்: ஆவணி அமாவாசையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. நாமக்கல் நகரில், வரலாற்று சிறப்புமிக்க ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, ஒரே கல்லினால், 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
ஒவ்வொரு தமிழ் மாதம், முதல் ஞாயிற்றுக்கிழமையும், பவுர்ணமி, அமாவாசை உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்களில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெறும். அதேபோல், நேற்று 30ல் ஆவணி அமாவாசை என்பதால் காலை, 9:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றப்பட்டது. தொடர்ந்து நல்லெண்ணெய், பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம், 1:00 மணிக்கு சுவாமிக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டது.