Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முக்குறுணி விநாயகருக்கு மெகா ... திருக்கோவிலூர் இரட்டை விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா திருக்கோவிலூர் இரட்டை விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரளயம் காத்த விநாயகருக்கு விடிய விடிய தேனபிஷேகம்
எழுத்தின் அளவு:
பிரளயம் காத்த விநாயகருக்கு விடிய விடிய தேனபிஷேகம்

பதிவு செய்த நாள்

03 செப்
2019
10:09

தஞ்சாவூர்: கும்பகோணம் அடுத்த திருப்புறம்பியம் சாட்சிநாத சுவாமி கோவிலில் அருள்பாலிக்கும் பிரளயம் காத்த விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விடிய,விடிய தேனபிஷேகம் நடைபெற்றது.

சோழவளநாட்டில் நால்வரால் பாடல் பெற்றதும்,வரலாற்று புகழுடையதும்,  மதுரை ஆதீனத்துக்கு சொந்தமானதாக திருப்புறம்பியத்தில் உள்ள கரும்படு சொல்லியம்மை உடனாய   சாட்சிநாதசுவாமி கோவில் திகழ்கிறது. இந்த கோவிலில் பிரளயம் காத்த விநாயகர் தனி சன்னதி கொண்டு  அருள்பாலித்து வருகிறார். இவரை தேனபிஷேக பெருமான் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். ராகு அந்தர கற்பத்தில் ஏற்பட்ட பிரளயத்தில் திருப்புறம்பியம் திருத்தலத்தை கருணையால் அழியாவண்ணம் காத்தவர் பிரளயம் காத்த விநாயகர். நத்தைகூடு, கிளிஞ்சல், கடல்நுரை ஆகிய கடல்  பொருட்களை தெய்வமேனியை கொண்டவராக பிரளயம் காத்த  விநாயகர் எழுந்தருளி காட்சியளித்து வருகிறார். வருண பகவனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி அன்று மட்டுமே  தேனபிஷேகம் நடைபெறும். மற்ற நாட்களில் அபிஷேகம் கிடையாது.

அதன் படி நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 35 வது ஆண்டாக மாலை 5 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்கியது. பின்னர் (இன்று) 3ம் தேதி அதிகாலை 4.30 மணி வரை தேனபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகம்  செய்யப்படும் தேனானது,  விநாயகர் திருமேனியில் உறிஞ்சப்படுவதும், அபிஷேக வேளையில் விநாயகர் செம்பவள மேனியராய் காட்சி தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துகழகம் சார்பில், கும்பகோணத்திலிருந்து சிறப்பு பஸ் இயக்கப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோடு புட்டு விக்கி பாலம் அருகே அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் ... மேலும்
 
temple news
மதுரை:“ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் பட்டர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,” ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு; செங்கல்பட்டு அடுத்த அஞ்சூர் கிராமத்தில், கட்டுமானப் பணியின் போது, பழமையான சிலைகள் ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar