மதுரை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ் மாநில சிவசேனா கட்சி சார்பில் மதுரை மேலமாசி வீதி-வடக்குமாசி வீதி சந்திப்பில் விநாயகர் சிலை ஊர்வலம் துவங்கியது.
செயல் தலைவர் துாதை செல்வம் தலைமை வகித்தார். சிம்மக்கல் வழியாக சிலை கொண்டு செல்லப்பட்டுவைகை ஆற்றில் கரைக்கப்பட்டது.
மாநில துணைத் தலைவர் நரசிம்மன், செயலாளர் காந்தி, மதுரை மாவட்டத் தலைவர் பரமசிவம் ராஜா, புதிய எழுச்சிப் பேரவை தலைவர் தமிழ்ச்செல்வன் பங்கேற்றனர்.