பதிவு செய்த நாள்
03
செப்
2019
04:09
திருப்பாச்சூர்:திருப்பாச்சூர் வாசீஸ்வர சுவாமி கோவிலில், 11 விநாயகர் சிலைகள் கொண்ட விநாயகர் சபையில் விநாயகர் சிறப்பு பூஜை நடந்தது.திருவள்ளூர் அடுத்துள்ளது திருப்பாச்சூர் கிராமம். இங்கு திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற திருத்தலமான, வாசீஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது.
திருத்தணி சுப்பிரமணி சுவாமி கோவிலின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த கோவில், 1,500 ஆண்டுகள் பழமையானது. இந்த கோவிலில், 11 விநாயகர் சிலைகள் கொண்ட செல்வ விநாயகர் சபை அமைந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள, புராதான கோவில்களில் இங்கு மட்டுமே, 11 விநாயகர் சிலைகள் இடம் பெற்றிருப்பது சிறப்பம்சமாகும்.இந்த கோவிலில், விநாயகர் சதுர்த்தியான நேற்று 3ல், காலை வழக்கம் போல் பூஜை நடந்தது. பின், மதியம் 3:00 மணி முதல் செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜையும் நடந்தது. மாலை 5:30 மணிக்கு செல்வ விநாயகர் மலர் அலங்கார த்தில், திருவீதி உலாவும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.