Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஊத்துக்கோட்டையில் விநாயகர் ... பேரம்பாக்கத்தில் 21ம் ஆண்டு விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி விநாயகர் சதுர்த்தி விழா: கோவில்களில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2019
04:09

திருத்தணி:விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை  மற்றும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பக்தர்கள்  வழிப்பட்டனர்.நாடு முழுவதும் நேற்று 2ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

திருத்தணி ம.பொ.சி.சாலையில் உள்ள சுந்தர விநாயகர் கோவில்,  அரக்கோணம் சாலையில் உள்ள முக்கண் விநாயகர், சேகர்வர்மா நகரில் உள்ள  சக்திவிநாயகர் கோவில், சித்துார் சாலையில் உள்ள விநாயகர் கோவில் உள்பட  திருத்தணி நகரம் மற்றும் கிராமங்களில் உள்ள கோவில்களில் மூலவருக்கு  சிறப்பு அபிஷேகம்,அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

அதே போல், திருத்தணி தாலுகாவில் உள்ள அனைத்து கிராமம் மற்றும் நகரத்தில், 100க்கும் மேற்பட்ட இடங்களில் பல்வேறு வடிவத்தில் விநாயகர் சிலைகள், ஒரு அடி முதல், 15 அடி உயரமுள்ள சிலைகள் வைத்து சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடத்தி வழிப்பட்டனர்.

இரவு, விநாயகர் திருவீதியுலா நடந்தது. பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், சுண்டல், கொழுக்கட்டை, அருகம்புல், பொறி மற்றும் பழவகைகள் படைத்து வழிப்பட்டனர். பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம், புளியோதரை, சர்க்கரை பொங்கல், சுண்டல், கேசரி போன்ற பிரசாதங்கள் வினியோகம் செய்யப்பட்டது. இதே போல், திருத்தணி அடுத்த ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஓட்டி, 7 அடி உயரமுள்ள விநாயகர் சிலை வைத்து, சிறப்பு பூஜைகள் நடத்தி வழிப்பட்டனர்.  

இரவு, 7:30 மணிக்கு விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் திருவீதியுலா வந்து  பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த பகுதி வாசிகள்  செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாதிரை நடராஜரை வழிபட சிறந்த நாள் ஆகும். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாகவும் ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் தருமபுர ஆதீனம் 27வது சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் கூத்தியார்குண்டு கிராமம் சுந்தரவள்ளி அம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar