Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குமரன்குன்று கோவிலில் பங்குனி ... அருணேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமழபாடியில் நந்தி திருமணம் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2012
11:04

அரியலூர்: திருமழபாடியில் நந்தியம்பெருமான் திருமண உற்சவம் கோலாகலமாக நடந்தது. அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே, திருமழபாடி கொள்ளிடக்கரையில், சுந்தராம்பிகை உடனுமர் வைத்தியநாத ஸ்வாமி கோயிலில் உள்ளது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் உள்ளிட்ட மூவராலும் தேவாரம் பாடப்பெ ற்ற இத்தலம், நான்கு திருமால், இந்திரன் மற்றும் நான்கு வேதங்கள் வந்து வழிபட் ட பாரம்பரிய பெருமை மிக்க தலமாகும். உலகெங்கும் எழுந்தருளும் சிவபெருமானுக்கு காவலனாகவும் தோழனாகவும் விளங்கும், நந்தியம்பெருமானுக்கு, வரலாற்று சிறப்பு இத்தலத்தில் ஆண்டு தோறும் பங்குனி புனர்பூசம் நாளில் திருமண உற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி சிலாதல முனிவரின் தவப்புதல்வராக அவதரித்த நந்தியம்பெருமானுக்கும், வசிட்ட முனிவரின் பேத்தியும், வியாக்ரபாத முனிவரின் புதல்வியுமான சுயஸாம்பிகா தேவிக்கும், நேற்று முன்தினம் இரவு பக்தி சிரத்தையுடன் திருமண உற்சவம் நடந்தது. வேறெங்கும் காணமுடியாத வகையில் மனிதகுல வழக்கப்படி சராசரி சீர்வரிசைகளுடன் நடந்த இத்திருமண உற்சவத்துக்காக, திருவையாறு அறம்வளர்த்த நாயகி உடனமர் ஐயாரப்பர், மற்றும் திருமழபாடி சுந்தராம்பிகை உடனமர் வைத்தியநாத ஸ்வாமி ஆகியோர் கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளினர். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களுடன் நடத்திய இத்திருமண உற்சவத்தின் நிறைவாக, கோயில் ஸ்தானிகர் வீட்டு பெண் ஜானகி, மணமகள் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு திருமண உற்சவத்தை நிறைவு செய்தார். அப்போது கோயில் வளாகத்தில் திரண்டிருந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் தென்னாடுடைய சிவனே போற்றி, என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என கோஷமிட்டனர். பக்தி சிரத்தையுடன் நடந்தேறிய இத்திருமண உற்சவத்தின் போது, தர்மபுரம் ஆதீனத்துக்குட்பட்ட கட்டளை தம்பிரான் குமாரசாமி தம்பிரான் ஸ்வாமிகள், அரியலூர் ஆர்.டி.ஓ., பூங்கொடி, எம்.எல்.ஏ., துரை மணிவேல், கோயிலின் நிர்வாக அலுவலர் மணி உள்பட பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். திருமண உற்சவத்தை முன்னிட்டு, ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கதளிகவுரி விரதம் குடும்ப ஒற்றுமைக்காக இருக்கும் விரதமாகும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறையில் கவுரி விரத ... மேலும்
 
temple news
நாகை; நாகை அடுத்த அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் ஆவணி பூச்சொரிதல் திருவிழா கோவிலில் வெகு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், மலையையே சிவனாக வழிபடுவதால், அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள ... மேலும்
 
temple news
கோவை; கோவை உக்கடம் கோட்டைமேடு பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி மாதம் மூன்றாவது ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை; புதுக்கோட்டை அருகே ராஜராஜன் பெயரில் இருந்த சிவலிங்கத்தை, தொல்லியல் வல்லுனர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar