Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னையில் கொலு கண்காட்சி துவக்கம் பொள்ளாச்சியில் சிலை விசர்ஜன பாதுகாப்பு: கேமரா அமைப்பு பொள்ளாச்சியில் சிலை விசர்ஜன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் ஸ்ரீஅனுமந்தராய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
திருப்பூர் ஸ்ரீஅனுமந்தராய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

04 செப்
2019
12:09

திருப்பூர்:பழமைவாய்ந்த இடுகம்பாளையம் ஸ்ரீஅனுமந்தராய சுவாமி கோவில், கும்பாபிஷேக விழா, நாளை 5ம் தேதி நடைபெறுகிறது.

கிருஷ்ண தேவராயர் ஆட்சிக்காலத்தில், வியாசராயரால், 750 ஆண்டுகளுக்கு முன், சுயம்பு பாறையில், புடைப்பு சிற்பமாக அனுமந்தராய சுவாமி கோவில் அமைக்கப்பட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக்கோவில் கும்பாபிஷேக விழா, நாளை நடைபெற உள்ளது.

விழாவையொட்டி, நேற்று 3ம் தேதி மாலை, 4:30 மணி முதல், 8:30 மணி வரை, முளைப்பாலி கை ஊர்வலம் நடைபெற்றது. இன்று 4ம் தேதி காலை, 6:00 மணிக்கு, திப்பள்ளி எழுச்சி, திருப் பாவை, திவ்யபிரபந்தம் சேவையும், வேதபாராயணம் ஹோமம், உற்சவர் திருமஞ்சனம், திருவாராதனம், பூர்ணாஹூதி சாற்றுமுறை நடக்கிறது. மதியம், 1:00 மணிக்கு, ஹோமம், வேதபாராயணம், சாற்றுமுறையும், மாலையில், நிமிலோன் நயனம், கலஸதாபனம், உற்சவர் யாகசாலை பிரவேசம் நடைபெறுகிறது.வரும், 5ம் தேதி காலை, 6:00 மணிக்கு, திருப்பள்ளி எழுச்சி, மகா பூர்ணாஹூதி, யாத்ராதானம், கும்ப உத்தாபணம் நடக்க உள்ளது. காலை, 9:15 முதல், 10:15 மணி வரை, மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவில் ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயர், சிரவை ஆதீனம் குமர குருபர சுவாமி, பேரூர் ஆதீனம் முருதாசல அடிகளார் பங்கேற்கின்றனர்.கும்பாபிஷேக விழா வையொட்டி, காலை, 10:30 மணி முதல், அன்னதானமும், தினசரி, காலை, 11:00 முதல், 12:00 மணி வரை, சுற்றுவட்டார பஜனை குழுவினரின் நாம சங்கீர்த்தனம் நடைபெறும்.இன்று 4ம் தேதி இரவு, 7:00 முதல் 9:00 மணி வரை, கும்பகோணம் ஸ்ரீவிட்டல்தாஸ் மகராஜின், ஸ்ரீராமநாம சங்கீர்த்தன பஜனை நடக்கிறது.

கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை, இடுகம்பாளையம் ஸ்ரீஅனுமந்தராயன்சுவாமி கோவில் தமிழ்மாதம் முதல் சனிக்கிழமை விழாக்குழுவினரும், பக்தர்களும் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி மாதத்தின் கடைசி நாள். வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதியுடன் சேர்ந்து வருவது மிக சிறந்ததாக ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம், ராம ஏகாதசியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி பக்தர்கள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் புரட்டாசி ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு ... மேலும்
 
temple news
சபரிமலை; ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறக்கிறது. நாளை காலை கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar