பதிவு செய்த நாள்
03
ஏப்
2012
11:04
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், 28 நாட்களில், 43 லட்சம் ரொக்கம், அரை கிலோ தங்கத்தை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருத்தணி முருகன் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கானோர் மூலவரை தரிசித்து, தங்களது நேர்த்தி கடனாக ரொக்கம், தங்கம், வெள்ளிப் பொருட்களை காணிக்கையாக உண்டியலில் செலுத்தி வருகின்றனர். இந்த உண்டியல் மாதம்தோறும் திறக்கப்பட்டு கோவில் ஊழியர்களால் எண்ணப்படுகிறது. மார்ச் 1ம் தேதி முதல், 28ம் தேதி வரை, பக்தர்கள் அளித்த காணிக்கையை கோவில் இணை ஆணையர் தனபால் முன்னிலையில் மலைக்கோவிலில் உள்ள வள்ளி மண்டபத்தில், உண்டியல்கள் பிரிக்கப்பட்டு கோவில் ஊழியர்களால் எண்ணப்பட்டது. 43 லட்சத்து, 19 ஆயிரத்து, 193 ரூபாய் ரொக்கம், 510 கிராம் தங்கமும், 3 கிலோ வெள்ளிப் பொருட்களும் இருந்தன. இது கடந்த மாதத்தை விட, 5 சதவீதம் கூடுதல் வருமானம்.