திருவண்ணாமலை கெங்கையம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09செப் 2019 03:09
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அய்யங்குள கீழ்க்கரையில் உள்ள கங்கையம்மன் கோவில், மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். திருவண்ணாமலை அய்யங்குள கீழ்க்கரை யில் உள்ள கங்கையம்மன் கோவிலில், நேற்று 8ம் தேதி மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவில் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மஹாலட்சுமி ஹோமம் நடந்தது. இரண்டா ம் காலை யாக பூஜைகளை தொடர்ந்து, யாக சாலையில் வைக்கப்பட்ட புனித கலச நீரை, கெங் கையம்மன் விமான கலசத்தின் மீது ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, கெங்கையம்மன் மூலவர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு, சிறப்பு அபிஷேக மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.