பதிவு செய்த நாள்
09
செப்
2019
03:09
திருத்தணி: திருத்தணி அடுத்த, காசிநாதபுரம் பகுதியில் உள்ள கொள்ளாபுரி அம்மன் கோவிலில், நேற்று 8ல், ஆண்டு ஜாத்திரை நடந்தது.
விழாவையொட்டி, காலை, 7:30 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.அதை தொடர்ந்து, காலை, 9:00 மணிக்கு, கூழ் வார்த்தல், கோவில் வளாகத்தில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பெண்கள், பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.இரவு, 7:00 மணிக்கு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பூ கரகத்துடன் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.