புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோவிலில், சித்தி புத்தி விநாயகர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் 69வது ஆண்டு பிரம்மோற்வ விழா கடந்த 4ம் தேதி, விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. 5ம் தேதி காலை 7:30 மணிக்குமேல் கொடியேற்றம், வெள்ளி மூஷிக வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. 6ம் தேதி சிம்மம் மற்றும் மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. நேற்று இரவு, சித்தி புத்தி விநாயகர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வரும் 13ம் தேதி, காலை 7:30 மணிக்கு தேர் திருவிழாவும், 14ம் தேதி நர்த்தன கணபதி தேரடி உற்சவம் மற்றும் கடல் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. அதைத் தொடர்ந்து, தினசரி சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதி உலாவும், 27 ம் தேதி 108 சங்காபிேஷகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.