பதிவு செய்த நாள்
10
செப்
2019
02:09
உடுமலை:உடுமலை, பொட்டையம்பாளையம் வேணுகோபால கிருஷ்ணன் கோவிலில், கும் பாபிஷேகம் நாளை (செப்., 11ல்) நடக்கிறது.
பொட்டையம்பாளையம், வேணுகோபால கிருஷ்ணன் கோவிலில், கற்பக விநாயகர், மாரி யம்மன், மாகாளியம்மன், பூமீ நீளா நாயகி சமேத சீனிவாச பெருமாள் சன்னதிகள் உள்ளன. கோவில் கும்பாபிஷேக விழா, நாளை (11ம்தேதி) நடக்கிறது. இன்று (செப்., 10ல்), அதிகாலை, 5:00 மணிக்கு சாந்தி ஹோமம், மாலை, 5:00 மணிக்கு முளைப்பாரி எடுத்துச்செல்லுதல், இரவு, 10:00 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.நாளை, 11ம்தேதி காலை, 6:30 மணிக்கு வேதபாராயணம் நடக்கிறது. தொடர்ந்து, சீனிவாசா பெருமாளுக்கு காலை, 9:30 மணி க்கு கும்பாபிஷேக விழா நடக்கிறது.