திருப்புத்துார்: திருப்புத்தூரில் உள்ள வேளாங்கண்ணி மாதா கோயிலில் தேவமாதா பிறந்தநாள் சிறப்பு திருப்பலி நடந்தது. பங்குதந்தை சந்தியாகு தலைமையில் திருப்பலி நடந்தது. மதுரை புனித பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி தாளாளர் சேவியர்ராஜ், தஞ்சாவூர் மெய்யபுரம் பங்கு தந்தை அமுல்வில்லியம், புதுக்கோட்டை லாரன்ஸ், சிவகங்கை மறைமாவட்ட பொருளாளர் சந்தியாகு உள்ளிட்டோர் பங்கேற்றனர். பங்கு இறைமக்கள் பங்கேற்றனர்.