அலங்காநல்லுார்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆவணி திருபவித்திரஉற்சவ திருவிழா தொடங்கியது.
உற்ஸவர் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளினார். அப்போது கீழே விரிக்கப்பட்டிருந்த நெல் உள்ளிட்ட தானியங்கள்மீது 108 கலசங்கள் வைக்கப்பட்டு தேங்காய்,வாழைப்பழம், மாவிலைகள், மலர்மாலைகள் மற்றும் தாம்பூலங்கள் இணைக்கப்பட்டன.தொடர்ந்து 135 அரிய மூலிகை திரவியங்கள், நுாபுரகங்கை தீர்த்தத்துடன்சேர்க்கப்பட்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திருபட்டு நுால்களாலான வண்ணமாலைகள் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. திருபவித்திர பட்டு நூல் மாலைகளை மூலவர் மற்றும் ஸ்ரீதேவி, பூமிதேவி, கல்யாணசுந்தரவள்ளி தாயார் மற்றும் ஆண்டாள் ஆகிய தெய்வங்களுக்கு அணிவிக்கப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தன.இவ்விழா செப்.,13ல் நிறைவுபெறும். ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா செய்திருந்தனர்.