கள்ளக்குறிச்சி முத்துமாரியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11செப் 2019 01:09
கள்ளக்குறிச்சி: க.மாமனந்தல் ரோடு முத்துமாரியமன் கோவிலில் தேர் திருவிழாவையொட்டி நேற்று அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது.
கள்ளக்குறிச்சி வ.உ.சி., நகர் க.மாம னந்தல் ரோடு முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 4ம் தேதி சக்தி அழைத்தல், கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் வீதியுலா நடந்தது.நேற்று காலை கோபூஜை, காத்தவராயன் ஆரியமாலா திருக்கல்யாணம், மோடி எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியையொட்டி முத்துமாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இன்று காலை 9:00 மணிக்கு அங்கபிரதட்சணம், அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல், காளி கோட்டை இடித்தல் நிகழ்ச்சிக்கு பின்னர் திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.