பதிவு செய்த நாள்
11
செப்
2019
02:09
பண்ருட்டி:பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில், திருபவித்ரோற்சவத்தை முன்னிட்டு, 1008 தாமரைப்பூ சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது.
பண்ருட்டி பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், 10 ம் ஆண்டு திருபவித் ரோற்சவம் நடந்தது. கடந்த 7 ம் தேதி மாலை 5:00 மணிக்கு பகவானிடம் அனுமதி பெறுதல், புற்றுமண் எடுத்தல், விதைவிடு விழா, பவித்திர பூஜை, முதல்கால ஹோமம் துவங்கி, பூர்ணா ஹூதி நடந்தது.கடந்த 8 ம் தேதி, காலை 8:00 மணிக்குமேல் நித்தியபூஜை, திருமஞ்சனம், பவித்ரங்கள் சாற்றுதல், மகாசாந்தி, 2ம் கால ஹோமம், பூர்ணாகுதி, மாலை 6:00 மணிக்கு 3ம் கால ஹோமம், நடந்தது. நேற்றுமுன்தினம் (செப்., 9ம் தேதி) காலை 7:00 மணிக்கு, அக்னி ஆராதனை, உற்சவர் திருமஞ்சனம், மகாசாந்தி திருமஞ்சனம், 4ம் கால பூர்ணாஹூதி, வேத பிரபந்த சாற்றுமுறை நடந்தது. மாலை 5:00 மணிக்கு உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக உள்புறப்பாடு நடந்தது. மாலை 6:30 மணிக்கு 1008 தாமரைப்பூக்களால், சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. ஏற்பாடுகளை தாமரைப்பூ சகஸ்ரநாம அர்ச்சனை குழுவினர் செய்திருந்தனர்.