பதிவு செய்த நாள்
11
செப்
2019
02:09
பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே உள்ள கொங்குநாடு கலை, அறிவியல் கல்லுாரியில், கல்வெட்டியல் குறித்த ஐந்து நாள் பயிலரங்கம் நடந்தது.கல்லுாரியின் தமிழ்த் துறையும், பூ.சா.கோ., கலை, அறிவியல் கல்லுாரியின் கல்வெட்டியல் பட்டயப் படிப்புத்துறையும் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு, கல்லுாரியின் முதல்வர் லட்சுமணசாமி தலைமை வகித்தார்.
தமிழ்துறைத் தலைவர் முருகேசன் வரவேற்றார். பூ.சா.கோ., கல்லுாரி கல்வெட்டியல் துறை யின் பொறுப்பாசிரியர் ரவி பயிலரங்கின் நோக்கம் குறித்து விளக்கினார்.சிறப்பு விருந்தினராக பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் பங்கேற்று பேசுகையில், ”இந்தியாவிலேயே, தமிழகத்தில்தான் கல்வெட்டுகள் அதிகமாகக் கிடைத்துள்ளன. ஆனால் அதில் வெறும், 10 சதவீத கல்வெட்டுகள் மட்டுமே நூல்வடிவம் பெற்றுள்ளன. கொங்கு நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள முட்டம் என்ற இடத்தில் கிடைத்துள்ள கல்வெட்டுகளின் வழியாக, கோவையில் பழங்கால வாணிகத்தை அறிந்து கொள்ள முடிகிறது. மிக முக்கியத்துவம் வாய்ந்த இது போன்றவற்றை நாம் பாதுகாத்து ஆவணப்படுத்த வேண்டும்,” என்றார்.