புதுச்சேரி: முத்தியால்பேட்டை லஷ்மி ஹயக்ரீவர் கோவில் பிரம்மோற்சவ விழாவில், நேற்று தேரோட்டம் நடந்தது.
முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள லஷ்மி ஹயக்ரீவர் கோவிலில் 48 வது பிரம்மோற்சவ விழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.அதனை தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் சுவாமி, பல்வேறு வாகனங்களில் புறப்பாடும், சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடந்து வந்தது. 6ம் தேதி கருட சேவை, 7ம் தேதி ராம காயத்ரி ஹோமம், ஹனுமந்த சேவை, 8 ம் தேதி சுதர்சன ஹோமம், யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. தினமும் இரவு சாற்றுமுறைக்கு பின் டோலோற்சவம் நடந்து வந்தது.முக்கிய உற்சவமான தேரோட்டம் நேற்று நடந்தது. அலங்கரிக்கப்பட்ட லட்சுமி ஹயக்ரீவர் (உற்சவர்)தேரில் எழுந்தருள செய்யப்பட்டு, பக்தர்கள் வடம் பிடித்து சுற்றுபுற வீதிகள் வழியாக இழுத்து வந்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.