பதிவு செய்த நாள்
12
செப்
2019
11:09
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில், மலையையே சிவனாக பாவித்து, பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். மாதந்தோறும் பவுர்ணமி தினத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள், மலையை வலம் வந்து, சுவாமி தரிசனம் செய்கின்றனர்.ஆவணி மாத பவுர்ணமி திதி, நாளை காலை, 8:19 மணி முதல், நாளை மறுநாள் காலை, 10:19 மணி வரை உள்ளது.இந்த நேரத்தில், பக்தர்கள், பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.