Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவன் கோயில்களில் பிரதோஷ விழா தஞ்சாவூர் பெரிய கோவிலில் பிரதோஷ பூஜை தஞ்சாவூர் பெரிய கோவிலில் பிரதோஷ பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மொகரம் பண்டிகை கொண்டாடிய ஹிந்துக்கள்
எழுத்தின் அளவு:
மொகரம் பண்டிகை கொண்டாடிய ஹிந்துக்கள்

பதிவு செய்த நாள்

12 செப்
2019
12:09

 தஞ்சாவூர் : தஞ்சாவூர் அருகே, முஸ்லிம்கள் ஒருவர் கூட வசிக்காத கிராமத்தில், மொகரம் பண்டிகையை, ஹிந்துக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

தஞ்சாவூர் அருகே, காசவளநாடு புதுார் கிராமத்தில், 300 ஆண்டுகளுக்கும் மேலாக, அல்லாவுக்கு விழா எடுத்து, அந்த ஊரில் உள்ள ஹிந்து மக்கள் கொண்டாடி வருகின்றனர். இங்கு ஒரு, முஸ்லிம் குடும்பமோ, ஒரு முஸ்லிமோ வசிக்கவில்லை.ஆனாலும், ஒவ்வொரு ஆண்டும் மொகரம் அன்று, இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மொகரம் பண்டிகைக்கு, 10 நாட்களுக்கு முன் விரதம் இருந்து, அல்லா சாமி என்றழைக்கப்படும், உள்ளங்கை உருவத்தை வெளியே எடுத்து, அதற்கு தினமும் பூஜை செய்து வழிபடுவர்.

தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு, ஊரின் மையத்தில் உள்ள அல்லா கோவில், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஊரே விழாக்கோலம் பூண்டது. உள்ளங்கை திருவுருவத்தை வீதியுலாவாக, நேற்று அதிகாலை வரை எடுத்துச் சென்றனர்.அப்போது, பெண்கள் வீடுகளில் புதிய மண் கலயத்தில் பானகம் கரைத்து, அவல், தேங்காய், பழம் வைத்து, அல்லாவுக்கு படையலிட்டு வழிபட்டனர்.நேற்று காலை, அல்லா கோவில் முன், தீ மிதி விழா நடந்தது. ஏராளமானோர், தங்கள் பிரார்த்தனை நிறைவேற வேண்டி, தீ மிதித்து, அல்லாவை வழிபட்டனர். இதுபோல், கொ.வல்லுண்டாம்பட்டு கிராமத்திலும், மொகரம் விழா நடந்தது. நேற்று காலை, ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து, அல்லாவை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 36 யானைகளுக்கு ஒரு மாத ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி நகராட்சி அருகில் சப்தேழு கன்னிமார் கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா நடக்கிறது. ... மேலும்
 
temple news
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன தரிசன திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar