பதிவு செய்த நாள்
12
செப்
2019
12:09
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பிரான்மலை மங்கைபாகர் தேனம்மை வடுகபைரவர் கோயிலில், 27 ஆண்டுக்கு பின் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் 2 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த மூன்றடுக்கு ஆலயம் என்ற சிறப்பு பெற்ற, மங்கைபாகர், தேனம்மை, வடுகபைரவர் கோயில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. ஆன்மிக வாதிகளின் சொர்க்க பூமியாக, பூலோக வைகுண்டமாக காட்சி தரும் பிரான்மலை கோயிலில் 27 ஆண்டுக்கு பின் இன்று அதிவிமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கடந்த செப்டம்பர் 4ம் தேதி முகூர்த்த கால் நடப்பட்டது. அதைத்தொடர்ந்து செப். 9ம் தேதி முதல் யாகசாலபூஜை தொடங்கியது. 10ம் தேதி 2 மற்றும் 3 ம் கால வேள்வி பூஜைகள், பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. 11ம் தேதி 4 மற்றும் 5ம் கால வேள்வி பூஜைகள், பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இன்று (12ம் தேதி) காலை 4:00 மணிக்கு 6ம் கால வேள்வி பூஜைகளும், 9:00 மணிக்கு கடம் புறப்பாடும், தொடர்ந்து 10:30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.