ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் பிள்ளையார்குளம் அக்ரஹாரத்தில் உள்ள ஸ்ரீவரத ஆஞ்ச நேயர் ஸமேத வழித்துணை விநாயகர் கோயில் மஹா கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதை முன்னிட்டு சுவாமிநாதபட்டர் தலைமையில் யாகசாலை, மஹா பூர்ணாஹீதி, தீபராதனை, யாத்ரா தானம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 9:30 மணிக்கு விமான மற்றும் மூலஸ் தானத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை வழித்துணை விநாயகர் ஆஞ்சநேயர் டிரஸ்ட் நிர்வாகி சந்தானகிருஷ்ணன், டிரஸ்டி கிருஷ்ணன் செய்திருந்தனர்.