சாயல்குடி:சாயல்குடி சுயம்புலிங்கநகரில் உள்ள சாஸ்தா செம்புலிங்க ஐய்யனார், சுயம்புலிங்க சுவாமி, பிரம்மசக்தி அம்மன் கோயில் பொங்கல் விழா கடந்த செப்., 4 அன்று காப்புகட்டுதலுடன் துவங்கியது.
108 பால்குடம் ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது.பகல் இரவில் அன்னதான மும், பெண்களின் பூத்தட்டு ஊர்வலம் உள்ளிட்டவைகள் நடந்தது. பூச்சொரிதல் விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.