பதிவு செய்த நாள்
13
செப்
2019
03:09
கரூர்: சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண் டனர். கரூர், தொழிற்பேட்டை அரசு காலனியில், கல்யாண சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று 12ம் தேதி நடந்தது. நேற்று முன்தினம் (செப்., 11ல்), கணபதி ஹோமம், முதற் கால யாக பூஜை, மருந்து சாற்றுதல், கலச ஸ்தாபனம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று 13ம் தேதி காலை, 6:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை நடந்தது.
காலை, 10:00 மணிக்கு சிவாச்சாரியார் கணேச சர்மா தலைமையில் திருமுறை இசையுடன் கோவிலை வலம் வந்தனர். பின், கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை திருப்பணி கமிட்டி தலைவர் பழநியப்பன், சஷ்டிக்குழு நிறுவனர் காளிமுத்து உட்பட பலர் செய்திருந்தனர்.