பதிவு செய்த நாள்
13
செப்
2019
03:09
நாமக்கல்: தமிழ்நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள், 2019-20ம் ஆண்டின் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்கு நபர் ஒருவருக்கு, 20 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்பத்தை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் கட்டணமின்றி பெறலாம். தவிர, www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்யலாம். விருப்பமுள்ள பயனாளிகள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், உரிய இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் கிறிஸ்தவர்களின் ஜெருசலேம் புனித பயணத்திற்கு நிதியுதவி கோரும் விண்ணப்பம் 2019-20 என குறிப்பிட்டு, ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலச மஹால் பாரம்பரிய கட்டடம், முதல்தளம், சேப்பாக்கம், சென்னை-600 005 என்ற முகவரிக்கு, வரும், 30க்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். விபரங்களுக்கு, 044 - 28520033 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.