பதிவு செய்த நாள்
14
செப்
2019
11:09
பீஹார் : ஆண்டுதோறும், புரட்டாசி மாதத்தில், 15 நாட்கள், நம் முன்னோர், பூமிக்கு வருவதாக நம்பப்படுகிறது. அந்த, 15 நாட்களை, ‘மகாளய பட்சம்’ என்று அழைக்கிறோம். புரட்டாசி, 18ல் தான் பிறக்கிறது என்றாலும், மகாளய பட்சம், துவங்கியதை முன்னிட்டு, பீஹார் மாநிலம், கயாவில் உள்ள பல்குனி ஆற்றில், முன்னோருக்கு பலர், திதி கொடுத்து வழிபாடு செய்தனர்.