திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், ஆவணி சதுர்தசி திதியை முன்னிட்டு நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்தது.
அதனையொட்டி நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கலச ஸ்தாபனம், சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் மூலமந்திரம், சிவபுராணம், தேவார திருவாசக பாராயணம் நடந்தது.அதனைத் தொடர்ந்து நடராஜ பெருமானுக்கு ஸ்ரீ ருத்ர மகா அபிஷேகமும், சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.ஆண்டுக்கு 6 தினங்கள் மட்டுமே நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறும், அதில் முக்கிய தினமான ஆவணி சதுர்தசி தினத்தில் நடைபெறும் அபிஷேகத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களும் அரூபமாய் எழுந்தருளி இருப்பர் என்பது ஐதீகம்.அந்த நேரத்தில் நடராஜரின் அபிஷேகத்தை தரிசனம் செய்தால் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.