ராமநாதபுரம்:ராமநாதபுரம் முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு பவருமழை பொழியவும் உலக நலன் வேண்டியும், திருமணமாகாத ஆண், பெண்களுக்கு தடை நீங்கவும் பல வண்ண பூக்களால் கோலமிட்டு 27 நட்சத்திரங்களுக்கும் பூஜைகள் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அரிமா மோகன், நிர்வாகிகள் நாகராஜன், சுசிந்தரன், மற்றும் விழாகுழுவினர் கள் செல்வராஜ், பாலாஜி, லதாதேவி, உஷாதேவி, சொர்ணவள்ளி, சுகுணா, புவனா மற்றும் பெண்கள் பங்கேற்றனர்.