பதிவு செய்த நாள்
15
செப்
2019
02:09
அனுப்பர்பாளையம்: திருப்பூர், பி.என். ரோடு, செட்டிபாளையம் தியாகி குமரன் காலனியில் அமைந்துள்ள ராஜ காளியம்மன், முத்தாரம்மன், பேச்சியம்மன், சுடலை மகாராஜா, கோவில் 13 ஆம் ஆண்டு பூச்சாட்டு, பொங்கல் விழா, கடந்த 11ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.
விழாவையொட்டி, நேற்று 14 தேதி அதிகாலை 6.00 மணிக்கு பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வந்து, கோவிலில் பொங்கல் வைத்து வழிபட்டனர். மதியம் 12.00 மணிக்கு சாமிக்கு உச்சி பூஜை, தொடர்ந்து, வில்லுபாட்டு நடந்தது. இரவு 10.00 மணிக்கு கம்பம் கங்கையில் சேர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி அருள் பெற்றனர். இன்று 15 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 11.00 மணிக்கு அம்மன் திருவீதி உலா வருதல் மற்றும் மஞ்சள் நீராடுதல் மநிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் கமிட்டி, ஊர் பொதுமக்கள், சர்வசக்தி ஜன பேரவை அமைப்பினர் செய்துள்ளனர்.