பதிவு செய்த நாள்
15
செப்
2019
02:09
ஈரோடு: ஈரோடு அருகே, காஞ்சிகோவில், செங்காளிபாளையம், ஸ்ரீமஹா மாரியம்மன் கோவிலில், கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. நாளை இரண்டாம் கால யாக பூஜை, திரவிய யாகத்தை தொடர்ந்து, கலச புறப்பாடு நடக்கிறது. இதை தொடர்ந்து, காலை, 9:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இதை தொடர்ந்து, மூலவருக்கு மஹா அபிஷேகம், தரிசனம், பூஜை, தீபாராதனை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியார் செய்கின்றனர்.