பதிவு செய்த நாள்
15
செப்
2019
03:09
முதுகுளத்துார்:முதுகுளத்தூர் அருகே நல்லூர் கிராமத்தில் பேச்சியம்மன் கோவில் புரவி எடுப்பு விழா செப்., 10-ல் நடைபெற்றது.
விழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம் இரு பிரிவாக நடைபெற்றது. பெரிய மாடு பிரிவு போட்டியில் 8 கி.,க்கு 17 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் தினையார்குடி சிவா மாடு முதல் பரிசும், ஏ.எம்.எஸ்.முகமது மாடு இரண்டாம் பரிசும், மல்லம் பட்டி காயத்திரி மாடு மூன்றாம் பரிசையும் பெற்றது. 5 கி.மீ.,க்கான சின்ன மாட்டு வண்டி போட்டியில் 20 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் பி.உசிலங்குளம் கருப்புதுரை பாண்டியன் மாடு முதல் பரிசும், சிங்கிலிப்பட்டி முருகபாண்டு மாடு இரண்டாம் பரிசும், கம்பம் செல்லாயி அம்மாள் மாடும், வெள்ளந்தாங்கி செந்தில் மாடும் மூன்றாம் பரிசை பெற்றது.வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசும், குத்துவிளக்கு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நல்லுார் கிராம மக்கள் செய்தனர்.