பதிவு செய்த நாள்
16
செப்
2019
11:09
காஞ்சிபுரம்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
குஜராத் மாநிலம் அருகே, சர் கீரிக் கடல் பகுதியில், ஆளில்லா படகுகள் சில மீட்கப்பட்டுள்ளன.இதனால், பயங்கரவாதிகள், தென் மாநிலங்களில் ஊடுருவ முகாமிட்டிருக்கலாம். தென் மாநிலங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என, ராணுவ கமாண்டர், எச்சரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும், காஞ்சிபுரத்தில் உள்ள பிரதான கோவில்களில், போலீசாரின் கண்காணிப்பு இல்லை.இதனால், பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என, நம் நாளிதழில், படத்துடன் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக, வரதராஜ பெருமாள் கோவிலில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.