பதிவு செய்த நாள்
16
செப்
2019
11:09
பாலக்காடு: செம்பை வைத்தியநாத பாகவதரின், 123வது பிறந்தநாள் விழா சங்கீத உற்சவம் நிறைவடைந்தது.
பாலக்காடு, செம்பை பார்த்தசாரதி கோவில் கலையரங்கில், வைத்தியநாத பாகவதரின், 123வது பிறந்த நாள் சங்கீத உற்சவம், நேற்று முன்தினம் துவங்கியது. 200க்கும் மேற்பட்ட கலைஞர்கள், சங்கீத ஆராதனை நடத்தினர். நிறைவு நாளான, நேற்று மதியம், செம்பை வித்யா பீடத்தின், 34வது ஆண்டு மாநாட்டை, பாகவதரின் சீடர், மண்ணுார் ராஜகுமாரஷனுண்ணி துவக்கி வைத்தார். மிருதங்க வித்வான், குழல்மன்னம் ராமகிருஷ்ணன், தலைமை வகித்தார். பொறாட்டு நாடக கலைஞர், மண்ணுார் சந்திரன் கவுரவிக்கப்பட்டார். வழக்கறிஞர், உன்னிகிருஷ்ணன், செம்பை வித்யா பீட துணை தலைவர், செம்பை சுரஷே், செயலர், கீழத்துார் முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பாகவதரின் சீடர், மண்ணுார் ராஜகுமாரனுண்ணியின் கச்சேரி நடந்தது. செறுதுருத்தி முரளீதரன் - வயலின், ஆலுவா கோபாலகிருஷ்ணன் - மிருதங்கம், ஷீன் சந்திரன் - கஜ்ஜிரை, மோகனன் மாரார் - இடக்கா வாசித்தனர்.