அனுப்பர்பாளையம்: குன்னத்துார் அடுத்த ஆதியூர் வெள்ளியம்பதியில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது.கோவில் குண்டம் திருவிழா கடந்த 11ம் தேதி முதல் தொடங்கி, விமரிசையாக நடந்து வருகிறது. விழாவையொட்டி, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர்.நாளை இரவு மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.