பதிவு செய்த நாள்
16
செப்
2019
12:09
அனுப்பர்பாளையம்: திருப்பூர், பி.என். ரோடு, செட்டிபாளையம் தியாகி குமரன் காலனியில் அமைந்துள்ள புகழ் பெற்ற ராஜகாளியம்மன், முத்தாரம்மன், பேச்சியம்மன், சுடலை மகாராஜா கோவில் 13 ஆம் ஆண்டு பொங்கல் விழா, கடந்த 11ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.
விழாவையொட்டி,, நேற்று காலை 11.00 மணிக்கு அம்மன் திருவீதி உலா வருதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் இருந்து, தியாகி குமரன் காலனியில் அமைந்துள்ள வீதிகள் வழியாக மீண்டும் கோவிலை அடைந்தார். தொடர்ந்து, மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பொங்கல் விழாவில், ஆயிரம் காண பக்தர்கள் பங்கேற்று அம்மன் அருள் பெற்றனர். விழாவில், பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் வம்பு, புங்கை, பூவரசு, தேக்கு, கொய்யா, மா, உள்ளிட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, சர்வ சக்தி ஜன பேரவை அமைப்பின் செய்திருந்தனர்.