பதிவு செய்த நாள்
16
செப்
2019
01:09
திருப்பூர்: திருப்பூரில் ஸ்ரீ ராகவேந்திரா கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் 8ம் தேதி நடக்கிறது.
திருப்பூர், திருமுருகன்பூண்டி ஆர்.ஜி., கார்டன், ஸ்ரீ ராகவேந்திரா நகரில், ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகளின் பக்தர் ஒருவர் நன்கொடையாக வழங்கிய இடத்தில், திருப்பூர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சேவா சங்கம் சார்பில், ஸ்ரீ ராகவேந்திரா கோவில் அமைக்கப்பட்டு வருகிறது.அக்., 8ம் தேதி கோவில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதில், மஹா சமஸ்தான மந்திராலய மடாதீசர் ஜெகத்குரு ஸ்ரீமன் மத்வாச்சாயர், அமீந்ததா தீர்த்தரா கரகமல சஞ்சாதர சுவாமிகள், ஸ்ரீ சுவிந்யோந்தரா சுவாமிகள் தலைமையில் நடக்கிறது.ஏற்பாடுகளை திருப்பூர் லட்சுமி நரசிம்மர் சேவா சங்க தலைவர் ராமமூர்த்தி, செயலாளர் நாராயணன், பொருளாளர் ராஜூ, துணை தலைவர் சஷேகிரி, துணை செயலாளர் சுகுமார் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர். திருப்பணிக்கு நன்கொடைகள் வரவேற்கப்படுவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.