பதிவு செய்த நாள்
16
செப்
2019
03:09
இந்த மாதத்தை பொறுத்தவரை சுக்கிரன் நன்மை செய்வார். மற்ற கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருப்பதால் எந்த ஒரு செயலையும் நிறைவேற்ற விடாமுயற்சி தேவைப்படும். அதற்காக கவலை கொள்ளத் தேவையில்லை. காரணம் குருவின் அனைத்து பார்வைகளும் சிறப்பாக உள்ளன. இதனால் எந்த பிரச்னையையும் முறியடித்து வெற்றிக்கு வழி காணலாம்.
குடும்பத்தில் சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பெண்களால் நன்மை கிடைக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும். விருந்து, விழா என அடிக்கடி செல்வீர்கள். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் வரலாம். எனவே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். கருத்துவேறுபாடுகளை பேசி தீர்க்கவும். புதனால் வீட்டினுள் இருந்த பிரச்னை, உறவினர்கள் வகையில் கருத்துவேறுபாடு, பண இழப்பு முதலியன செப். 25க்கு பிறகு மறையும். அதன் பிறகு அவரால் செல்வாக்கு பாதிப்பு ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். சிலருக்கு வீண் கவலை வரலாம். செப்.28,29ல் சகோதரிகள் மூலம் பணஉதவி கிடைக்கும். செப்.24,25ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் அக்.6ல் உறவினர் வகையில் கருத்து வேறுபாடு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.
உத்தியோகத்தில் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். வீண் அலைச்சல் ஏற்படும். அதிகாரிகளின் ஆதரவு சுமாராகவே இருக்கும். கோரிக்கைகள் நிறைவேறாமல் போகலாம். இதனால் வேலையில் வெறுப்புணர்ச்சி ஏற்படும். பொறுமையும் நிதானமும் உங்களுக்கு கைகொடுக்கும். ஆனால் குருவின் 9-ம் இடத்துப் பார்வையால் புதிய பதவி கிடைக்கும். விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். செப்.22,23 சிறப்பான நாட்களாக அமையும். முக்கிய கோரிக்கையை அப்போது வைக்கலாம். அக்.5க்கு பிறகு அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காணலாம். அதிகாரிகளின் ஆதரவும், அனுசரணையும் வந்து சேரும். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு சூரியனால் கடந்த மாதம் ஏற்பட்ட விரயம், தொழில் நஷ்டம், முதலியன இனி இருக்காது. இந்த மாதம் சுக்கிரனால் நல்ல வளர்ச்சி காண்பர். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். அக்.5க்கு பிறகு பொருளாதார வளம் பெருகும். அரசின் சலுகை கிடைக்கும். வியாபாரிகளுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். செப்,௨6,27,30 அக்.1,2ல் சந்திரனால் தடைகளை சந்திக்கலாம். செப்.22 வரை புதனால் எதிரிகளின் தொல்லை வரலாம். முயற்சியில் தோல்வியை சந்திக்கும் நிலை உருவாகலாம். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அக்.10,11ல் திடீர் பணவரவு கிடைக்கும்.
கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு குறைவின்றி கிடைக்கும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அக்.5க்கு பிறகு மதிப்பு, மரியாதை உயரும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் பிரதிபலன் எதிர்பாராமல் பாடுபடவேண்டியிருக்கும்.
மாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. சிலருக்கு நண்பர்களால் அவப்பெயர் வரலாம். புதியவர்களிடம் விழிப்புடன் இருக்கவும். குருவின் பார்வையால் ஆசிரியர்களின் அறிவுரை கிடைக்கும்.
விவசாயிகளுக்கு உழைப்புக்கு தகுந்த வருமானம் கிடைக்கும். விளைச்சல் சுமாராக இருக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தடைபடும். கால்நடைகள் மூலம் நல்ல ஆதாயம் வரும். பக்கத்து நிலத்துக்காரரிடம் அனுசரித்து போவது நல்லது.
பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். புதனால் அண்டை வீட்டார் வகையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். சிலருக்கு பொருள் இழப்பு ஏற்படலாம். குருவின் 7-ம் இடத்துப் பார்வையால் உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள், உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்ட திருமண பேச்சில் நல்ல முடிவு கிடைக்கும். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனைப் பெறுவர். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். அக்.3,4ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து சீதனப்பொருள் வரப் பெறலாம். அக்.12,13,14 ஆகியவை சிறப்பானதாக அமையும். உடல் நலத்தில் அக்கறை தேவை.
* நல்ல நாள்: செப்.22,23, 24,25,28,29, அக்.3,4,10, 11,12,13,14
* கவன நாள்: செப்டம்பர் 18,19 அக்டோபர் 15,16 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 5,7
* நிறம்: வெள்ளை, மஞ்சள்
பரிகாரம் :
● காலையில் நீராடி சூரிய நமஸ்காரம்
● செவ்வாயன்று ஏழைக்கு துவரை தானம்
● சதுர்த்தியன்று விநாயகருக்கு நெய் தீபம்