பதிவு செய்த நாள்
16
செப்
2019
03:09
இந்த மாதம் சூரியனால் நன்மை அதிகரிக்கும். சுக்கிரன் அக்.5 வரை நற்பலன் கொடுப்பார். புதன் செப். 25ல் சாதகமற்ற இடத்திற்கு சென்றாலும் கவலை வேண்டாம். காரணம் செவ்வாய் செப்.26ல் சாதகமான இடத்திற்கு வந்து நன்மை தருவார். முயற்சியில் வெற்றி கிடைக்கும். கையில் பணப்புழக்கம் இருக்கும். எந்த செயலையும் கச்சிதமாக செய்து முடிக்கும் வல்லமை பெறுவீர்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும்.
சனிபகவானால் வீண் அலைச்சல் ஏற்படும். சிலர் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். தாயை பிரியும் நிலை ஏற்படலாம். குருவால் மனக்கவலை ஏற்படும். சுறுசுறுப்பு அற்ற நிலை, இருப்பிட மாற்றம் முதலியன ஏற்படலாம். இருப்பினும் அவரின் அனைத்து பார்வைகளும் சாதகமாக உள்ளன. இதனால் பிரச்னைகளை எளிதில் முறியடிப்பீர்கள்
குடும்பத்தில் சொந்தபந்தங்களின் வருகை இருக்கும். வீட்டில் ஆடம்பர வசதிகள் அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். அக்.3,4ல் பெண்கள் மூலம் முன்னேற்றம் உண்டாகும். சகோதர வகையில் பொன், பொருள் சேரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். செப்.28,29ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் அக்.10,11ல் அவர்கள் வகையில் கருத்து வேறுபாடு வர வாய்ப்புண்டு எனவே சற்று ஒதுங்கி இருக்கவும்.
பணியாளர்களுக்கு வேலையில் நிம்மதியும் திருப்தியும் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதில் தடை ஏதும் இருக்காது. சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் அனுசரணையும் வந்து சேரும். அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காண்பர். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி எளிதில் கிடைக்கும். செப்.26,27 சிறப்பான நாட்களாக அமையும். பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். செப்.26க்கு பிறகு போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். வேலைபளு குறையும். சிலருக்கு புதிய பதவி தேடி வரும். வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.
வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். வங்கிக் கடன் எளிதாக கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய வியாபாரம் அனுகூலத்தை தரும். வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். புதனால் செப்.25க்கு பிறகு மறைமுக எதிரிகளால் இடையூறுகள் வரலாம். செப்.18,19, அக்.15,16 ஆகிய நாட்களில் திடீர் வருமானம் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு, வருமானத்திற்கு குறைவிருக்காது. புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அக்.5க்கு பிறகு ஒப்பந்தம் பெறுவதில் தடைகளை சந்திக்க நேரிடும். சக கலைஞர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் செப். 26க்கு பிறகு முன்னேற்றம் காண்பர். கையில் பணப்புழக்கம் இருக்கும். எதிர்பார்த்த பதவியும் கிடைக்கும்.
மாணவர்கள் முன்னேற்றத்துடன் காணப்படுவர். புதன் சாதகமான இடத்தில் இருப்பதால் கல்வியில் சிறந்து விளங்குவர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். பாடத்தில் மட்டும் அல்லாமல் விளையாட்டு போட்டியிலும் வெற்றி கிடைக்கும். செப்.25 க்கு பிறகு சிரத்தை எடுத்து படிக்கவும்.
விவசாயிகள் எதிர்பார்த்ததை விட மகசூல் அதிகரிக்கும். மஞ்சள், பாசிப் பயறு, காய்கறி, பழவகைகள் போன்றவை மூலம் நல்ல வருமானம் காணலாம். கால்நடைச் செல்வம் பெருகும். செப்.26க்கு பிறகு புதிதாகச் சொத்து வாங்கலாம்.
பெண்கள் குடும்ப வாழ்வில் சந்தோஷம் காண்பர். கணவரின் அன்புக்கும், ஆதரவுக்கும் குறைவிருக்காது. வேலைக்கு செல்லும் பெண்கள் நற்பலன் கிடைக்க பெறுவர். வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். அக்.7,8,9 ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப் பெறலாம். செப். 20,21, அக்.17 சிறப்பான நாட்களாக அமையும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். சகோதரர் வகையில் பண உதவி கிடைக்கும். விருந்து, விழா என செல்வீர்கள். செவ்வாயால் ஏற்பட்ட பிரச்னைகள் செப்.26க்கு பிறகு மறையும். அக்கம் பக்கத்தினரால் ஏற்பட்ட தொல்லை நீங்கும்.
உஷ்ணம், தோல் சம்பந்தமான நோய்கள் செப். 26க்கு பிறகு பூரண குணமாகும்.
மருத்துவச் செலவு குறையும்.
* நல்ல நாள்: செப்.18,19,20, 21,26,27,28,29, அக்.3,4, 7,8,9,15,16,17
* கவன நாள்: செப்.22,23 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்:7,9
* நிறம்: நீலம், சிவப்பு
பரிகாரம் :
● வெள்ளிக்கிழமையில் நாகதேவதை வழிபாடு
● சனிக்கிழமையில் பெருமாளுக்கு அர்ச்சனை
● திங்களன்று சிவபெருமானுக்கு வில்வ மாலை