பதிவு செய்த நாள்
17
செப்
2019
03:09
கோபி: கோபி பெருமாள் கோவில் வீதியில், ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், கும்பாபிஷேக முதலாமாண்டு விழா, நேற்று 16ம் தேதி நடந்தது.
இதையொட்டி விஷ்வக்ஷன ஆராதனை, அனுக்ஞை, கோ - பூஜை, மகாதீபாராதனை நடந்தது. அக்ரஹார வீதி, பெருமாள் கோவில் வீதி, சரவணா தியேட்டர் சாலை, வாஸ்து நகர் பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, தக்கார் நாகராஜ், செயல் அலுவலர் சாந்தா செய்திருந்தனர்.