நாகர்கோவில்: கன்னியாகுமரி அருகே அஞ்சுகிராமம் ரஸ்தாகாடு கடற்கரை பகுதியில் மரத்தாலானா எட்டு சிவலிங்கங்கள் கரை ஒதுங்கின. போலீசார் விசாரணையில், அப்பகுதியில் உள்ள ஒரு கோயிலில் கும்பாபிஷேக பூஜை களின் போது 12 சிவலிங்கங்களை கடலில் விட்டதாக தெரியவந்தது. அதில் எட்டு கரை ஒதுங்கியுள்ளது. சிவலிங்கங்கள் கன்னியாகுமரி அருங்காட்சியகத்துக்கு எடுத்து செல்லப்பட்டன.