ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் குரு வருள் திருமுறை மன்றத்தின் சார்பில் பதிக விளக்ககூட்டம் நடந்தது. அமைப்பாளர் கோவிந்தன் தலைமை வகித்தார். சொற்பொழிவாளர் முத்துசாமி வரவேற்றார். திருமுறை பாடல்களை ஜெயசுகந்திமாரியப்பன் பாடினார். பனசை மூர்த்தி பதிகவிளக்கமளித்தார். பூமிநாதன் நன்றி கூறினார். பொன்னாயிரசாமி குடும்பத்தினர் ஏற்றுபோற்றினர்.