பதிவு செய்த நாள்
18
செப்
2019
02:09
பேரூர்:பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்கள், ஓராண்டுக்கும் மேலாக பாதுகாப்பின்றி உள்ளது. பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர்த் திருவிழா கொண்டாட ப்படுகிறது. கடந்த ஆண்டு, தேர்த்திருவிழா முடிந்த பின், தேர்கள் தகர ’ஷெட்’ அமைத்து பாதுகாக்கப்பட்ட நிலையில், மே மாதம் வீசிய காற்றில் ’ஷெட்’ பறந்தன.இதன் பின், தேர்கள் பாதுகாக்காமல் விடப்பட்டன. நடப்பாண்டு தேர்த்திருவிழாவும், கடந்த மார்ச்சில் நடந்து முடிந்து விட்ட நிலையிலும், தேர்கள் கேட்பாரின்றி உள்ளன.
இதுகுறித்து, கடந்த ஜூன் மாதத்தில், பேரூர் கோவில் அப்போதைய உதவி ஆணையர் சரவண னிடம் கேட்ட போது, ’தேர்களுக்கு நிரந்தர ’ஷெட்’ அமைக்க, ரூ.64 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு ள்ளது; 18 மீ., உயரம், 12 மீ., அகலம், 24 மீ., நீளத்தில் ’ஷெட்’ அமைக்கப்படும்’ என, தெரிவித் தார்.
ஆனால், இன்று வரை மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் வருகின்றன. இத்துடன், சுவாமி எழுந்தருளும் திருத்தேரில், காகம் கூடு கட்ட துவங்கி விட்டது. ஓராண்டை கடந்து விட்டதால், இனியும் காலம் கடத்தாமல், பணிகளை விரைந்து துவங்க அறநிலையத் துறை யினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேர்களுக்கு ’ஷெட்’ அமைக்கவும், தெப்பக்குளத்தை சீரமைக்கவும், டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கும்.- ஹரிஹரன்உதவி ஆணையர், பேரூர் பட்டீஸ்வரர் கோவில்தேர்களுக்கு ’ஷெட்’ அமைக்கவும், தெப்பக்குளத்தை சீரமைக்கவும், டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கும்.- ஹரிஹரன்உதவி ஆணையர், பேரூர் பட்டீஸ்வரர் கோவில்