பதிவு செய்த நாள்
19
செப்
2019
11:09
பழநி : புரட்டாசி மாதபிறப்பை முன்னிட்டு, பழநி முருகன் கோயில் ஆனந்த விநாயகர் சன்னதியில் யாகபூஜை வழிபாடு நடந்தது.
பழநி மலைக்கோயிலில் புரட்டாசி மாதபிறப்பை முன்னிட்டு, ஆனந்த விநாயகருக்கு கும்பகலசங்கள் வைத்து, கணபதி ஹோமத்துடன், யாகபூஜை நடந்தது. விநாயகருக்கு புனித நீரால் அபிஷேகம் செய்து, லட்டு படைக்கப்பட்டது. வெள்ளிக் கவச அலங்காரத்தில், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. திருஆவினன்குடி, பெரியநாயகியம்மன், லட்சுமி நாராயணப்பெருமாள், பெரியாவுடையார் உள்ளிட்ட கோயில்களில், பெருமாள், அம்மன், சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரத்தில், தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.