Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் சிறப்பு தரிசன சேவை ... மானாமதுரையில் தாயமங்கலம் திசையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் ரகசியமாக தேவ பிரசன்னம்: தந்திரிக்கு தெரியாமல் நடத்தப்பட்டதா?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 ஏப்
2012
11:04

சபரிமலை : சபரிமலை அய்யப்பன் கோவிலில் தந்திரிக்குக் கூடத் தெரியாமல் ரகசியமாக தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டது. கோவிலின் வளர்ச்சிப் பணிகள் குறித்து, சுவாமியின் கருத்து அறிவதற்காக இது நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சபரிமலை அய்யப்பன் கோவிலில் தற்போது பங்குனி உத்திரம் உற்சவம் நடந்து வருகிறது. கோவிலில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, கோவில்களில் எந்தவொரு புதிய பணியையும் துவக்குவதற்கு முன்னால், தெய்வத்தின் கருத்தை அறிவதற்காக தேவ பிரசன்னம் நடத்தப்படுவது வழக்கம்.ஆனால், அதற்கு முன்பாக, கோவிலின் தலைமை அர்ச்சகர் உட்பட பலருக்கும் தெரிவிக்கப்படுவது நடைமுறை. இந்நிலையில், சபரிமலை அய்யப்பன் கோவிலில் நேற்று காலை தேவ பிரசன்ன நிகழ்ச்சி யாருக்கும் தெரியாமல் ரகசியமாக துவங்கியது. இதுகுறித்து நேற்று முன்தினம் இரவு தான் தந்திரி கண்டரரு மகேஸ்வருவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.எதற்காக ரகசியமாக நடத்தப்படுகிறது என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இருப்பினும், கோவில் அதிகாரிகள் சிலர் கூறுகையில், "கோவிலின் வளர்ச்சிப் பணிகள் குறித்து தெய்வத்தின் கருத்து அறிய தேவ பிரசன்னம் நடத்தப்படுகிறது என்று பட்டும் படாமலும் தெரிவித்தனர். ஆனால், அவ்வாறு வளர்ச்சிப் பணிக்காக இது நடத்தப்படுவதாக இருந்தாலும் அதை ஏன் ரகசியமாக நடத்தவேண்டும் என்பது தான் பலருக்கும் விடை தெரியாத புதிராக இருந்தது.தொடர்ந்து இன்றும் தேவ பிரசன்ன நிகழ்ச்சி நடக்கும் என தெரிகிறது. சில ஆண்டுகளுக்கு முன் இதுபோல் பிரபல ஜோதிடர் உண்ணிக்கிருஷ்ண பணிக்கரை கொண்டு நடத்தப்பட்ட தேவ பிரசன்ன நிகழ்ச்சியில் தான், நடிகை ஒருவர் சன்னதிக்குள் நுழைந்து கோவிலுக்கு களங்கத்தை ஏற்படுத்தி விட்டார் என்பது தெரிந்தது.இதை அடுத்து கோவில் சன்னதிக்குள் நுழைந்து மூலவரை தொட்டு வணங்கியது நான் தான் என, கன்னட துணை நடிகை ஜெயமாலா விளக்கமளித்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ரான்னி கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; ஆவணி மாத பவுர்ணமியான நாளை (செப்.7, 2025) சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்தியாவில் தெரியும் இந்த கிரகணம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி; மணக்குள விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சுவாமி திருத்தேரில் வீதி உலா வந்து ... மேலும்
 
temple news
நாகை; நாகை அடுத்த அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் ஆவணி பூச்சொரிதல் திருவிழா கோவிலில் வெகு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், மலையையே சிவனாக வழிபடுவதால், அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள ... மேலும்
 
temple news
கோவை; கோவை உக்கடம் கோட்டைமேடு பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி மாதம் மூன்றாவது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar