பதிவு செய்த நாள்
22
செப்
2019
03:09
சின்னாளபட்டி : புரட்டாசி முதல் சனிவாரத்தை முன்னிட்டு அம்பாத்துறை ரோடு ஆஞ்சநேயர் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவருக்கு திரவிய அபிேஷகத்துடன், வெண்ணைய் காப்பு, துளசி மாலை அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள், வெற்றிலை மாலை, துதி மாலை அணிவித்து வழிபட்டனர். அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். குஜிலியம்பாறை:கூம்பூர் ஊராட்சி பாம்புலுபட்டி அச்சுண்டப்பாறை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில், புரட்டாசி சனி வாரத்தை முன்னிட்டு, பாம்புலுபட்டி, ஆட்டுக்கான்பட்டி, குள்ளம்பட்டி, சின்னாக்கோணானுtர் மக்கள் சார்பில், சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.